தந்தை,மகனை வங்கிக்குள் வைத்து பூட்டிய அதிகாரிகள் - சாவியை தேடிய போலீசார்..!

Son Father Locked Bank Punjab Officers Inside
By Thahir Apr 03, 2022 07:54 AM GMT
Report

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வங்கி ஒன்றில் தந்தை,மகனை உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லுாதியானா,சுந்தீர் நகரில் உள்ள தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளி இல்லாத நிலையில் வங்கி ஊழியர்களே சாவியை எடுத்து செல்வது வழக்கமாக வைத்துள்ளனர.

இந்நிலையில் நேற்று அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒருவர் தனது 5 வயது மகனுடன் பணம் செலுத்த சென்றுள்ளார்.

நேற்று சனிக்கிழமை என்பதால் இறுதிகட்ட நேரத்தில் சென்று வங்கியில் பணம் செலுத்த சென்றுள்ளார். சனிக்கிழமை என்பதால் இறுதிக்கட்ட நேரத்தில் சென்று வங்கியில் பணம் செலுத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் சிறிது நேரம் வங்கிக்குள் ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்ததாக தெரியவருகிறது. இதையடுத்து வங்கி நேரம் முடிந்த பின் வங்கி ஊழியர்கள் கவனிக்காமல் வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதன் பின் விழித்துக்கொண்ட அந்த தந்தை,மகன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதன் பின் வங்கி அதிகாரி வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சாவியை வாங்கி வந்து தந்தை,மகனை இரண்டு மணி நேரத்திற்கு பின் மீட்டனர்.

வங்கியில் தந்தை மகன் சிக்கி கொண்ட நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.