இந்தியில் தான் பேசுவோம்...இங்கிலீஷ் எல்லாம் தெரியாது..நடிகர் சித்தார்த்தை துன்புறுத்திய அதிகாரிகள்
நடிகர் சித்தார்த் தனது சமூக வளைத்தல பக்கத்தில் விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னிடமும் தன் பெற்றோரிடம் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தி மட்டும் தான் தெரியும்...இங்கிலீஷ் எல்லாம் தெரியாது
நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த நிலையில் தனது பெற்றோருடன் சித்தார்த் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது மதுரை விமான நிலையம் வழியே பயணித்த தன்னிடம் சிஆர்பிஎஃப் அலுவலகர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், ஆங்கிலத்தில் பேசக்கோரி கேட்ட போதும் தங்களிடம் இந்தியில் பேசியதோடு, இந்தியாவில் இப்படி தான் நடந்து கொள்வோம் என கூறியதாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் வேதனை
இது குறித்து தனது சமூக வளைத்தலத்தின் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றில் சிஆர்பிஎஃப் அலுவலர்கள் மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம்.
எனது வயதான பெற்றோரிடம் பைக்கில் இருந்து நாணயங்களை எடுக்குமாறு கோரினார். மேலும் ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டும் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினார்கள்.
இது மிகவும் மோசமான செயல். நாங்கள் எதிர்த்து கேட்டபோது இந்தியாவில் இது இப்படி தான் இருக்கும் எனப் பேசினார்கள். வேலையில்லாதவர்கள் தங்கள் அதிகாரத்தை இப்படியெல்லாம் காண்பிக்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.