ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
பத்ரக் - கபிலாஸ் சரக்கு ரயில், பத்ரக்கிலிருந்து கட்டாக் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் அடுத்த கோரை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் வந்த போது, எதிர்பாராத விதமாக ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்து சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் வெளியே எடுக்கப்பட்டன.
படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்ட மீட்புக் குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
After #Puneaccident again #TrainAccident happen in #Odisha 😢😢#Korai
— Ayesha (@Ayesha86627087) November 21, 2022
Today morning is very emotional .. Om Shanti for those who lost her life in this #ACCIDENT pic.twitter.com/ILn5XdIoES
#Odisha: At least 2 dead as a freight train rams into the waiting hall at #Korai railway station in #Bhadrak - Kapilas road section this morning.
— Tazeen Qureshy (@TazeenQureshy) November 21, 2022
Train services on the route likely to be affected.#Jajpur #TrainAccident pic.twitter.com/cPNuKxaupJ