ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Accident Odisha
By Nandhini Nov 21, 2022 05:59 PM GMT
Report

பத்ரக் - கபிலாஸ் சரக்கு ரயில், பத்ரக்கிலிருந்து கட்டாக் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் அடுத்த கோரை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் வந்த போது, எதிர்பாராத விதமாக ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த விபத்து சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் வெளியே எடுக்கப்பட்டன.

படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்ட மீட்புக் குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

odisha-viral-video-accident