‘ஓ சொல்றியா மாமா...’ பாடலின் நடன இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா திரைப்படம் வெளியானது. இப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.
புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.
இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, இல்லையோ, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தாவின் நடனமாடிய ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘ஓ சொல்றியா மாமா’ பாடலின் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சர்யா மீது போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டில் நடனக்குழுவில் இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் நடன இயக்குநர் கணேஷ் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.