மருத்துவமனையில் ஓ.. சொல்றியா மாமா.. பாடல் கேட்டவுடன் உயிர் பிழைத்த பாட்டி - வைரலாகும் வீடியோ
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வெளியான படம் 'புஷ்பா'. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த டிசம்பர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நடிகை சமந்தா, ‘புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா..' என்ற குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இப்பாடல் வைரலாகி பட்டித்தொட்டியெங்கும் கலக்கிக்கொண்டு வருகிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் பாட்டி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, இப்பாடலை ஒளிபரப்பப்பட்டபோது, பாட்டி இந்த பாடலை பாடியுள்ளார். இதனால், அப்பாட்டி உயிர் பிழைத்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதோ அந்த பாடல் -