ஓ.பன்னீர்செல்வம் மீது குறி பார்த்து தண்ணீர் பாட்டில் வீசிய ரவுடி தாத்தா - வைரலாகும் பரபரப்பு வீடியோ

Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Nandhini Jun 24, 2022 06:02 AM GMT
Report

ஒற்றைத் தலைமை

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ் - இபிஎஸ் வந்தனர்.

ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் கோஷம்

அப்போது, பொதுக்குழு அரங்கிற்கு ஓ.பி.எஸ். வந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக தொடர்ந்து கோஷமும், முழக்கமும் எழுப்பப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி ஆதாரவாளர்களால் ஓ.பி.எஸ். ஒழிக, துரோகி ஒழிக என்று கூச்சலிட்டு கோஷம் எழுப்பினர். அந்த நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் மீது குறி பார்த்து தண்ணீர் பாட்டில் வீசிய ரவுடி தாத்தா - வைரலாகும் பரபரப்பு வீடியோ | O Panneerselvam Admk Tamilnadu Edappati

தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையம் நிராகரிப்பதாக எடப்பாடி தரப்பு அறிவித்ததால் ஓ.பி.எஸ். அதிர்ச்சி அடைந்தார். அப்போது, ஓ.பி.எஸ். மேடையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் ஏற்பட்டது.

தண்ணீர் பாட்டில் தாக்கிய நபர்

தற்போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் தாக்குதல் நடத்திய ரவுடி தாத்தா கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் தண்ணீர் பாட்டிலை குறி பார்த்து ஓ.பன்னீர்செல்வம் மீது தாக்கும் பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஓ.பன்னீர்செல்வம் மீது குறி பார்த்து தண்ணீர் பாட்டில் வீசிய ரவுடி தாத்தா - வைரலாகும் பரபரப்பு வீடியோ | O Panneerselvam Admk Tamilnadu Edappati