பொதுக்குழு கூட்டத்திற்கு முதலில் வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுகவில் பரபரப்பு

Tamil nadu Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Nandhini Jun 23, 2022 05:12 AM GMT
Report

ஒற்றைத் தலைமை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தது. இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.

தேர்தல் ஆணையத்தில் முறையீடு

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் நேற்று முறையீடு செய்தது.

பேசித் தீர்த்துக்கலாம் வாங்க... எடப்பாடி கடிதம்

இதனையடுத்து, எடப்பாடி ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பொதுக்குழுவுக்கு வாருங்கள்; பிரச்னைகளை பொதுக்குழுவில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவுக்கு அழைத்தது போல, பொதுக்குழுவில் பங்கேற்போம் என்று எழுதினார்.

பொதுக்குழு கூட்டத்திற்கு முதலில் வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுகவில் பரபரப்பு | O Panneerselvam Admk Tamilnadu

பொதுக்குழுவுக்கு முதலில் வந்த ஓபிஎஸ்

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்தை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து முதல் ஆளாக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்தார்.