நபிகள் நாயகம் சர்ச்சை விவகாரம் - நுபுர் சர்மா தலையை வெட்ட சொன்ன காஷ்மீர் முஸ்லிம் மத குரு கைது
சர்ச்சை பேச்சு
கடந்த 27-ம் தேதி முன்பு ஞானவாபி மதவழிபாடு தலம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி குறித்து இழிவான வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து நுபுர் சர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டாலையும் அக்கட்சி நீக்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
இதையடுத்து இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. ராஞ்சியில் நடந்த வன்முறையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
முஸ்லிம் மத குரு கபூர் கைது இந்நிலையில், இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் மீது அவதூறு விமர்சனங்களை முன்வைத்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கபூர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
முஸ்லிம் மத குரு கைது
கடந்த வெள்ளிக்கிழமை தொழுமையின் போது நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
பல இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. டெல்லி, உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் பதற்றத்தை இந்த போராட்டம் ஏற்படுத்தியது.
நுபுர் சர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மத குரு கபூர் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கபூர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் அவர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், நுபுர் சர்மா விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த, மேற்கு வங்க பாஜக தலைவர் ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.