NO கல்யாணம்: SINGLES எண்ணிக்கை அதிகரிப்பு: பாவம் - இதுதான் காரணமா?
திருமணம் செய்யாமல் தனியாக வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
SINGLES
தென்கொரியாவில் திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதிய வசதியின்மை மற்றும் வேலைப் பாதுகாப்பு இல்லாததுதான் இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
மேலும், குழந்தையை பெற்று வளர்ப்பது பெரிய சவாலான விஷயமாகவும் கருதுவதாக தெரிவித்துள்ளனர். இங்கு, 2021 கணக்கெடுப்பின் படி, மொத்தம் 5.17 கோடி மக்கள் உள்ளனர். 5ல் 2 பேர் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்.
வசதியின்மை
7.2 மில்லியன் அல்லது மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், பல எண்ணிக்கையிலான குடும்பக் குழுவை விட அதிகமாக உள்ளனர். 2050 ஆம் ஆண்டில் தனியாக வாழ்பவர்கள் விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.