முடிஞ்சா சீமான ஒத்தைக்கு ஒத்தை வரச்சொல்லு...வீர லட்சுமியை தாக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினர்..!!

Vijayalakshmi Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Karthick Sep 16, 2023 09:53 AM GMT
Report

இன்று சென்னையை அடுத்த திருவள்ளூரில் நாம் தமிழர் கட்சியினருக்கும், வீரலட்சுமி ஆதரவாளர்களுக்கும் திடீரென தகராறு ஏற்பட இரு தரப்பும் தாக்கிக்கொள்ள முற்பட்டனர்.

சீமான் மீது புகார்

திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தார். அதில் "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம்.ஆனால்,என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருக்கலைப்பு செய்தார். தற்போது சீமான் மற்றும் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார்.

ntk-party-members-tries-to-attack-

எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், திருவள்ளூர் நீதிபதி முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் சீமான் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால், கடந்த 12ம் தேதி சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.இதனைத் தொடர்ந்து சீமானின் வீட்டிற்கே சென்று நேரில் ஆஜராகுமாறு 2வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது.

வாபஸ்

இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் மீது கொடுக்கப்பட்ட புகாரை நேற்று நள்ளிரவில் வாபஸ் வாங்கியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

ntk-party-members-tries-to-attack-

புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் " என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

வீரலட்சுமி ஆவேசம்

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழர் முன்னேற்றப்படைத்தலைவர் தலைவர் வீரலட்சுமி, விஜயலட்சுமியின் காலில் விழுந்து சீமான் சமாதானம் ஆகிவிட்டார் என்றும் இந்த விவகாரத்தில் அவர் முற்றிலும் தோற்றுவிட்டார் என்று தெரிவித்தார்.

 ntk-party-members-tries-to-attack-

மேலும், போலீசார் காலிலும், அரசாங்கத்தின் காலில் விழுவதை விட, விஜயலட்சுமி காலில் விழுந்து சீமான் இந்த விவகாரத்தில் முற்றிலும் தோற்று விட்டார் என சுட்டிக்காட்டிய அவர், இரண்டாவது முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்றால் போலீசார் தன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தில் தான் சீமான் இவ்வாறு செய்து உள்ளார் வீரலட்சுமி கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் தான் ஏன் சீமானிடம் காசு வாங்கவேண்டும் என கேட்ட வீரலட்சுமி, தன்னிடம் உள்ள படையை தான் திரட்டி வந்தால், நாம் தமிழர் கட்சியால் வடதமிழகத்தில் கால் வைக்கமுடியாது என்றும், தேவையில்லாத பூச்சாண்டி காட்டும் வேலையை தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ntk-party-members-tries-to-attack-

முன்னதாக இன்று திருவள்ளுரிற்கு வீரலட்சுமி வந்த போது, அங்கு நாம் தமிழர் கட்சியினரும் கூடினர். இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட பின்னர், அது தகராறாக மாறிய சூழலில், நாம் தமிழர் கட்சியினர் வீரலக்ஷ்மியை தாக்க முற்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வீரலக்ஷ்மியின் ஆதரவாளர் ஒருவர், நாம் தமிழர் கட்சியினரிடம், தைரியம் இருந்தால் சீமானை ஒத்தைக்கு ஒத்தை வர சொல்லு டா ஆவேசமாக சண்டைக்கு தயாரான நிலையில், அவர்களை போலீசார் அங்கிருந்த அப்புறப்படுத்தினர்.