சலிச்சுப் போன வெளிநாட்டு வாழ்க்கை - இந்தியாவுக்கு திரும்பத் துடிக்கும் NRI-கள்
வெளிநாட்டில் வசித்து வருபவர்கள் இந்தியாவில் வந்து செட்டில் ஆக விரும்புகின்றனர்.
என்ஆர்ஐ
SBNRI என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், சிறப்பான உற்பத்தித் திறன்கள், நிதிச் சேவைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இந்தியா வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்டார்ட்அப் மையமாக உள்ளது.
இதன் மூலம் 72 சதவீத என்ஆர்ஐகள், இந்தியாவில் ஓய்வுக்காலத்தை சிறப்பாக கழிக்கலாம் என நம்புகின்றனர். முதலீடுகளுக்கும் நல்ல வாய்ப்புள்ளதாகவும் கருதுகின்றனர்.
விருப்பம்
இளம்வயதில் பணம் சேர்ப்பது எதிர்காலத்தில் உதவும் என்பதால் ஐடி நிபுணர்கள் இப்போதைக்கு வெளிநாடுகளுக்குப் படையெடுத்து வந்தாலும் அவர்களது ஓய்வுகாலம் நெருங்கும்போதும் இதேபோன்ற சூழ்நிலை நிச்சயம் உருவாகும்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப ஆர்வத்துடன் உள்ளதாக தெரியவந்துள்ளது.
60 சதவீத என்ஆர்ஐகள் இந்தியா வருவதற்கு தயாராகி வருகின்றனர்.