'வெற்றி நிச்சயம்" அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகமதி சிறையிலிருந்து கடிதம்!

Iran World
By Jiyath Nov 04, 2023 10:01 AM GMT
Report

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகமதி சிறையிலிருந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நர்கஸ் முகமதி

ஈரானிய பெண்களின் உரிமைக்காக போராடியவர் நர்கஸ் முகமதி. ஈரான் அதிகாரத்தையும், அரசையும் எதிர்த்துப் போராடியா அவர் தனது வாழ்நாளில் 10க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

இறுதியாக கடந்த 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையிருக்கும் நர்கஸ் முகமது 2023ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். இந்நிலையில் சிறையிருந்து ஒரு கடிதத்தை அவர் எழுதியுள்ளார். அந்த கடிதம் அவரின் மகள் கியானா வாசிக்கும் காட்சி வீடியோவாக நோபலின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறையிருந்து கடிதம்

அந்த கடிதத்தில் நர்கஸ் முகமதி எழுதியிருப்பதாவது "உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்; இறுதி வெற்றிவரை ஈரான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எவினில் அடைக்கப்பட்டுள்ள 46 பெண் கைதிகள் சார்பாக நோபல் கமிட்டிக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.

இந்த இயக்கத்தின் பலம் ஈரானிய பெண்களின் அமைப்பில் உள்ளது. நாங்கள் விரும்பாததைவிட எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக அறிவோம். வெற்றி எளிதானது அல்ல, ஆனால் அது நிச்சயம் கிடைக்கும். நாங்கள் அதை நம்புகிறோம், வெற்றியில் உறுதியாக இருக்கிறோம்’’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.