தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது..கர்நாடகாவில் பாஜகவினர் போராட்டம்
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கூடாது என அம்மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கர்நாடக பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி விவகாரம்
தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய 37 டிஎம்சி தண்ணீரை முழுமையாக திறந்து விடாமல் கர்நாடக அரசு இருந்து வருகிறது. இருப்பினும் காவிரி நதிநீர் மேலாண்மை குழுவிடம் தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர, இவ்வழக்கில் கர்நாடகா அரசும் இணைந்தது. இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வை உச்சநீதிமன்றம் இன்று அமைத்துள்ளது.
கர்நாடக பாஜக போராட்டம்
தற்போது வினாடிக்கு சுமார் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நேற்றும் கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 717 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இதற்கு பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தொிவித்துள்ளன.
இந்நிலையில் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது என அம்மாநில ஆளும் காங்கிரஸ்'ஸிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.