அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை - கைவிரிக்கும் இலங்கை..!
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை என இலங்கை பொது நிரவாகத்துறை செயலாளர் தகவல்.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தினசரி தேவைக்கு கூட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையின் பொது நிர்வாகத்துறை செயலாளர் பிரியந்தா மயதுன்னே தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து பேசிய அவர்,
இலங்கை பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது என்றும் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு பஞ்சத்தை எதிர்நோக்கி மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும் வேதனை தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்களுக்கு பணம் வழங்கவோ,ஓய்வூதியம் வழங்கவோ அரசிடம் பணம் இல்லை என்றார்.
மக்களுக்கு ஒரு கோப்பை பால் கூட ஆடம்பரமாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொலைநோக்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ளவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.