கிறிஸ் கெயிலுக்கு துரோகம் செய்த கிரிக்கெட் வாரியம் : அணியிலிருந்து ரஸில் அதிரடி நீக்கம்

westindies chrisgayle
By Irumporai Jan 01, 2022 11:34 AM GMT
Report

டி20 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர் 12 சுற்றில் வெளியேறியது.

இந்த தொடருக்கு பிறகு பேசிய கிறிஸ் கெயில், மேற்கிந்தியத் தீவுகளில் தாம் கடைசி டி20 போட்டியை விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு ஏற்றார் போல், இம்மாதத்தில் அயர்லாந்துடன் ஒரு டி20 போட்டி நடைபெற இருந்தது. அந்தப் போட்டி தான் கிறிஸ் கெயிலுக்கு கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயிலின் பெயர் இடம்பெறவில்லை. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அடையாளமாக விளங்கிய கெயிலுக்கு வாரியம் பிரியாவிடை அளிக்காதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

எனினும் அயர்லாந்து தொடர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், இந்த ஏற்பாட்டை செய்யவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் வாரிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் குறைந்த பிறகு, இதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரர் ரஸில் அணியில் சேர்க்கப்படவில்லை.