சென்னை அணிக்கு தடையாக இருந்த மின்வெட்டு , புலம்பும் ரசிகர்கள்

Chennai Super Kings IPL 2022
By Irumporai May 13, 2022 05:44 AM GMT
Report

நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது சென்னை சூப்பர்கிங்ஸ் மும்பை அணி மோதியது இந்த போட்டியில் மைதானத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக டிஆர்எஸ் எடுக்க முடியாது எனக் கூறப்பட்டது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல்.இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை, மும்பைக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனால், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியைப் பொருத்தவரை பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பொல்லார்டுக்கு நேற்று பிறந்தநாள். எனவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்ட் களத்தில் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் களத்தில் இறக்கப்படவில்லை. பொல்லார்டுக்கு பதிலாக ஸ்டுப்ஸ் களமிறங்கினார்.

ஆட்டம் தொடங்கியே வேகத்திலேயே பவர் பிளேக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்தது. கடந்த சில போட்டிகளில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் தேவான் கான்வே.

ஆனால், நேற்று இந்த மைதானத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது கான்வேயுடைய விக்கெட்தான். போட்டி தொடங்கிய முதல் 10 பந்துகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்தனர். இந்த 3 விக்கெட்டுகளுக்கு சென்னை அணி டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை.

கான்வே, மொயின் அலி, உத்தப்பா ஆகியோர் அவுட்டாகினர். இதில் மொயின் அலி கேட்சில் அவுட் ஆகினார். கான்வே, உத்தப்பா எல்பிடபிள்யூவில் அவுட்டாகினர். கான்வே போட்டியின் முதல் ஓவரிலேயே அவுட்டாகினார்.

அவரால் டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. கான்வே எல்பிடபிள்யூவில் அவுட்டாகவில்லை. இருந்தாலும் அவர் டிஆர்எஸ் எடுக்க முடியவில்லை என்கிற ஒரு மோசமான நிலை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து வந்த பிளேயர்களும் பிரெஸர் காரணமாக அவுட்டாகினர். முதல் கோணல் முற்றிலும் கோணல் எனும் நிலை ஏற்பட்டது.

மைதானத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக டிஆர்எஸ் எடுக்க முடியாது எனக் கூறப்பட்டது. மைதானத்தில் உள்ள மற்ற இடங்களில் மின்சாரம் இருந்தபோது, டிஆர்எஸ் எடுப்பதில் மட்டும் என்ன சிக்கல் எனும் கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள்  பலரும் இரு அணிகளுக்கும் விதிமுறை ஒரே மாதிரி இருக்கும் போது. மின் தடை இருந்திருந்தால் போட்டியைத் தாமதமாக தொடங்கியிருக்கலாம்.

அல்லது இரு அணிகளுக்கும் டிஆர்எஸ் இல்லை என்கிற விதியை போட்டிருக்கலாம் இது இரண்டுமே இல்லாமல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் டிஆர்எஸ் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.