ரெய்டு பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டோம் - கூட்டணி இல்லை - ஜெயக்குமார் உறுதி
கூட்டணியில் இல்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளோம் என மீண்டும் ஒரு முறை அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னணி தலைவர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை கடந்த 18-ஆம் தேதி எடுத்த முடிவில் நிலையாக இருக்கின்றோம் என தெரிவித்த ஜெயக்குமார், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறினார்.
சோதனைகளை கண்டு அஞ்சும் கூட்டம் இல்லை
மேலும், தமிழக மக்களின் பிரச்சனைகளை குறித்தே அதிமுக எம்.பி.க்கள் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்தனர் என விளக்கமளித்த அவர், கட்சி குறித்து அல்ல என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சோதனைகளை கண்டு அஞ்சும் கூட்டம் தாங்கள் இல்லை என்றும், 1972-ஆம் ஆண்டு முதல் பல சோதனைகளை தாண்டி தான் அதிமுக இயக்கம் பயணித்துள்ளது என தெரிவித்தார்.மேலும், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் அதிமுகவை இருமுறை ஜெயலலிதா வெற்றி பெற செய்தார் என சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், ரைட் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அதிமுக பயன்படாது என கூறினார்.