ஆகஸ்ட் 31 வரைக்கும் விமான போக்குவரத்து கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

india airtraffic
By Irumporai Jul 30, 2021 01:26 PM GMT
Report

கொரோனா இரண்டாவது அலை காரணமாக உலக நாடுகள் பலவற்றில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில நாடுகளில் விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது.

ஆனால் ஒருசில நாடுகளில் தடை இன்னும் நீடிக்கப்பட்டு வருகிறதுஅந்தவகையில் இந்தியாவின் சர்வேதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஆகஸ்ட்-31 ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.