நித்யானந்தாவுடனான வெளியான வீடியோ - மறுவிசாரணை கோரிய நடிகை ரஞ்சிதா - வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

Video Court Case Postponed Nithyanandha Actress Ranjitha
By Nandhini Feb 08, 2022 03:40 AM GMT
Report

பிடதி ஆசிரம தலைவர் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோவை பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது. இந்த வீடியோ நவீன தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்டது என்றும், வீடியோ காட்சியை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், நித்யானந்தா தியான பீட நிர்வாகி சென்னை காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரை பதிவு செய்த போலீசார், லெனின், ஐயப்பன், ஆர்த்தி ராவ் உள்பட பலர் மீது சிபிசிஐடி பிரிவினர் வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்த வழக்கை மறு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும், ஆர்த்திராவ், பரத்வாஜ் இடையே நடந்த இ-மெயில் உரையாடலையும், கர்நாடக மாநில அமர்வு நீதிமன்றத்தில் உள்ள மார்பிங் வீடியோ கேசட் குறித்தும் மீண்டும் விசாரிக்க கோரியும் நடிகை ரஞ்சிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரஞ்சிதா தரப்பில் இந்த வழக்கை நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இதனையடுத்து, நேரடி விசாரணைக்கு அனுமதித்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.