இளம் பெண்ணை நம்ப வைத்து நிர்வான பூஜை - பலாத்காரம் செய்ய முயன்ற ஊராட்சி மன்ற தலைவர்

Sexual harassment Tamil Nadu Police
By Thahir Mar 11, 2023 09:00 AM GMT
Report

கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி இளம் பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பூஜை நடத்தி நிர்வாணப்படுத்திய அதை மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறி கேட்க சென்ற பெண் 

தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் செல்வராஜ். இவர் சிறு வயதில் இருந்தே ஊர் மக்களுக்கு குறி பார்த்து வருகிறார்.

ஏதேனும் சுப காரியத்திற்கு செல்வதற்கு முன்னர் இவரிடம் சென்று குறி கேட்டுவிட்டு போனால் அக்காரியம் அவர் சொன்னதை போன்று நடக்கும் என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இவரிடம் சில நாட்களுக்கு முன்னர் தேனியில் உள்ள மஞ்சள்நாயகன் பட்டியைச் சேர்ந்த காமாட்சி என்ற 22 வயது இளம் பெண் குறி கேட்க வந்திருக்கிறார்.

அந்த இளம் பெண்ணுடன் அவருடைய தோழி மற்றும் தோழியின் கணவர் உள்ளிட்ட 3 பேரும் சென்றுள்ளனர். காமாட்சி தனது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அத்துமீறல் 

இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக குறி கேட்க சென்றுள்ளார். அவரிடம் எல்லா பிரச்சனையும் கேட்டுவிட்டு அடுத்தமுறை தனியாக வருமாறு செல்வராஜ் கூறியுள்ளார்.

இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து அந்த இளம் பெண் மீண்டும் செல்வராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது செல்வராஜ் தனது வீட்டிற்கு வந்த இளம் பெண்ணை வைத்து யாகம் நடத்தியுள்ளார்.

யாகம் முடிந்தவுடன் தாயத்து கயிறு கட்ட வேண்டும் இதற்காக தனது தோட்டத்துக்கு செல்ல வேண்டும் என அந்த இளம் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை ஆடைகளை கழற்ற சொல்லி செல்வராஜ் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இளம் பெண்ணை நம்ப வைத்து நிர்வான பூஜை - பலாத்காரம் செய்ய முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் | Nirvana Puja With The Young Woman

இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் செல்வராஜ் எல்லாம் உன் கணவருக்காக தான் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்த பெண் ஆடைகளை கழற்றி நிர்வாணமாகியுள்ளார். அப்போது காமாட்சிக்கு தெரியாமல் அவரை நிர்வாணமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

காவல்துறையிடம் புகார் 

இதை கவனித்த அந்த பெண் தடுக்க முயன்ற போது. செல்வராஜ் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். எனவே செல்வராஜ் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற அந்த பெண் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாலத்காரம் முயற்சி மட்டுமல்லாமல் தன்னிடம் தாயத்துக்காக ரூ.20 ஆயிரம் முறைகேடு செய்து விட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து செல்வராஜ் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தான் குறி சொல்வதை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு தடையை உருவாக்க வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு இளம்பெண் மூலம் தன்னை சிக்க வைக்க முயல்கிறார்கள் என்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.