ஜிஎஸ்டி குறித்த கேள்வி.... கொதித்தெழுந்த நிர்மலா சீதாராமன்
இன்று நாடாளுமன்ற மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்வியால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காரசாரமான பதிலை அளித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம்
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நாடாளுமன்றம் கூடியது. முதல் நாளான இன்று மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுப்பது குறித்தான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கவில்லை என மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்,
மேலும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ஏற்கனவே 2010ல் நிறைவேற்றப்பட்டது என்பதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் என குறிப்பிட்டு பேசினார்.=
நிர்மலா சீதாராமன் பதில்
இந்த கேள்வியால் சற்று கோபமடைந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனே எழுந்து தனது பதிலை பேச துவங்கினார்.
ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை என பதில் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுவது முற்றிலும் தவறான தகவல். இன்னும் சொல்லப் போனால் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி 3 முறை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.