பஞ்சாப் சட்டசபை முன்னாள் சபாநாயகர் நிர்மல் சிங் கஹ்லோன் உயிரிழந்தார்
By Nandhini
நிர்மல் சிங் கஹ்லோன்
பஞ்சாப் சட்டசபை சபாநாயகரும், மூத்த எஸ்ஏடி தலைவருமான நிர்மல் சிங் கஹ்லோன் உயிரிழந்தார். கடந்த 1997ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை அகாலி அரசாங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கான அமைச்சராக இருந்தார் நிர்மல் சிங் கஹ்லோன்.
அவர் 2007 முதல் 2012 வரை பஞ்சாப் விதான் சபாவின் சபாநாயகராகவும் பணியாற்றினார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிர்மல் சிங் கஹ்லோன் இன்று காலை உயிரிழந்தார்.
குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் சூரியன் அருகே உள்ள தாதுஜோத் கிராமத்தில் கஹ்லோனின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.