8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த மும்பை போலீசாரின் குறும்படம் - இணையத்தில் வைரல்
மும்பை காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள நிர்பயா என்ற பிரிவு குறித்து எடுத்துரைக்கும் குறும்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மும்பை காவல்துறையில் நிர்பயா என்ற புதிய பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ள புதிய பிரிவு குறித்து குறும்படம் ஒன்றை மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள இந்த குறும்படத்திற்கு அமிதாப் பச்சன் பின்னி குரல் கொடுத்துள்ளார்.
இந்த குறும்படத்தில் பெண்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியா 103 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் உடனடியாக நிர்பயா குழு போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து பாதுகாப்பு அளிப்பார்கள்.
மும்பை போலீசாரின் இந்த குறும்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த குறும்படத்தை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.