எங்களை தவறாக பேசிய ராகுல் மீது வழக்கு தொடரப்போகிறேன் : ஆவேசமான ராகுல் காந்தி
ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் வழக்கு போட போகிறேன் என நீரவ் மோடி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீரவ் மோடி
கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசியபோது மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்து உள்ளார். இந்த நிலையில் பொருளாதார குற்றம் செய்துவிட்டு இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற நீரவ்மோடி, ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்தில் வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.
வழக்கு தொடரப்போகிறேன்
கடந்த 10 ஆண்டுகள் மேலாக வசித்து வரும் லலித் மோடி ராகுல் காந்திக்கு எதிராக ஆவேசமாக தனது டுவிடட்ரில் பதிவு செய்துள்ளார். அதில் நீதிக்கு பயந்து தப்பி ஓடி விட்டதாக ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகள் சிலரும் மீண்டும் மீண்டும் சொல்வதை நான் பார்த்து வருகிறேன்
நிதி மோசடிகள் தன்னை தொடர்பு படுத்தி பேசியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறேன் என்று தெரிவித்தார்