அந்த இயக்குநர் என்னிடம் மிகவும் மோசமாக நடந்துகெண்டார்... - பகீர் கிளப்பிய பிரபல நடிகை
தென்னிந்திய இயக்குநர் ஒருவர் தன்னிடம் ரொம்ப மோசமாக நடந்து கொண்டதாக நடிகை நிக்கி டம்போலி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் கவர்ச்சியில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை நிக்கி டம்போலி.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ தெலுங்கு ரீமேக்கில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார். மேலும், தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை நிக்கி டம்போலி பேட்டி ஒன்று கொடுத்தார். அந்த பேட்டியில் -
தென்னிந்திய இயக்குநர் ஒருவர் தன்னிடம் ரொம்ப மோசமாக நடந்து கொண்டார். மற்ற நடனக் கலைஞர்களுடன், வெளிநாட்டில் டான்ஸ் ஆடிய போது மற்ற நடன கலைஞர்களை விட தன்னை ரொம்பவும் கீழ்த்தரமாக நடத்தினார். இதனால், நான் மிகவும் மனவேதனை அடைந்தோன்.
வேதனை தங்கா முடியாமல் அழுது கொண்டே போனேன். என்னால் அந்த நிகழ்வை மறக்கமுடியவில்லை. ஆனால், அந்த இயக்குநர் யார் என்பதை சொல்ல மாட்டேன். ஏனென்றால் தற்போது அவருடன் எனக்கு பிரச்சனை இல்லை என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது, சமூகவலைத்தளங்களில் இந்தச் செய்தி வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் எந்த இயக்குநரை நிக்கி சொல்கிறார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.