நிக்கி கல்ராணியின் திருமண நாளில் அழகான குழந்தையை பெற்றெடுத்த அவருடைய அக்கா - குவியும் வாழ்த்து
டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதேபோல் ‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம், கோச்சடையான், மரகத நாணயம், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இவர்கள் இருவரும் இணைந்து ‘யாகாவராயினும் நாகாக்க’, ‘மரகதநாணயம்’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர்.
இந்த ஜோடி ரீல் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரியல் லைஃப்பிலும் ஜோடியாகியுள்ளனர்.
ஒன்றாக படங்களில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
இதன் தொடர்ச்சியாக ஆதி - நிக்கி கல்ராணி இடையேயான நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24-ம் தேதி சென்னையில் ஒரு ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.
இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இவர்களது திருமணம் கடந்த 18ம் தேதி சென்னையில் எளிமையாக நடைப்பெற்றது.
திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் , மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர்களின் திருமணத்தில் விக்னேஷ் சிவன், தெலுங்கு நடிகர்கள் நானி , சுதீப் கிஷன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் நிக்கி கல்ராணிக்கு திருமணமான அதே தினத்தில் அவருடைய அக்கா சஞ்சனா கல்ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.