பெண்ணின் உதட்டை கடித்துத் துப்பிய இளம்பெண் - காரணத்தை கேட்டு அதிர்ந்த காவல்துறையினர்!
சென்னை புழல் மத்தியச் சிறையில் கைதிகளுக்குள் மோதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னை புழல் மத்தியச் சிறையில், பெண்கள் பிரிவில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி நாடுகளைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில்போதைபொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா (31), கிளாரக்கா (32) என்ற 2 பெண் கைது செய்யப்பட்டு, விசாரணை பிரிவில் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இதே கடத்தல் வழக்கில், நைஜீரிய நாட்டு இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையின் ஆண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நைஜீரியா இளைஞரை, மோனிகா, கிளாரக்கோ இருவருமே காதலித்து வருவதாக கூறப்படுகிறது .அப்போது, சிறைத்துறை அனுமதியுடன் விசாரணை பிரிவிலுள்ள நைஜீரிய ஆண் காதலருடன் கிளாரக்கோ பேசி வந்துள்ளார்.
கைதி
அதன்படி வழக்கம் போல் நேற்று மாலை பார்வையாளர் சந்திப்பு நேரத்தின் போது நைஜீரிய ஆண் காதலருடன் கிளாரக்கோபேசிக் கொண்டிருந்தார் இதனையடுத்து தன்னுடைய சிறை ரூமுக்கு கிளாரக்கோவிடம் ,அவர் தன்னுடைய காதலன் என்று மோனிகா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர்களது வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றவே கைகலப்பாக மாறி ஆத்திரமடைந்த மோனிகா, கிளாரக்கோவின் உதட்டைச் சரமாரியாகக் கடித்துவிட்டார்.இதில் காயம் அடைந்த கிளாரக்கோ அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அறிந்த சிறைக் காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் புழல் மத்தியச் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.