தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை

Tamil nadu Karnataka Kerala
By Thahir Feb 15, 2023 03:44 AM GMT
Report

சென்னை, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

NIA officials raid all over Tamil Nadu

சென்னை, திருநெல்வேலி, தென்காசி, போன்ற மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில், கொடுங்கையூர், மண்ணடி உள்பட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் டவுன் காரிக்கான்தோப்பு பகுதியில் உள்ள மன்சூர் என்பவரின் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

60 இடங்களில் சோதனை 

அதே போல, திருநெல்வேலியில் உள்ள ஏர்வாடியிலும்ஈ தென்காசி மாவட்டம் அச்சன்புதுாரிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடந்து வருகிறது.