பழனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 3வது நாளாக தொடர் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 3வது நாளாக என்ஐஏ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடரும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணை
என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5பேர் டெல்லியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள், திண்டுக்கல்லில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 5பேரிடம் விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் பழனிக்கு சென்றனர். அங்கு பழனி பெரிய கடைவீதியில் டீக்கடை நடத்தி வரும் முகமது கைசர் வயது (50), என்பவரிடம் விசாரணை நடத்தினர். இவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராக இருந்தவர் ஆவார். பழனி நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் 6மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று 2வது நாளாக முகமதுகைசரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை அவரை விசாரித்தனர்.
பின், முகமதுகைசரின் டீக்கடையில் சதாம் (30) என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது, அவரை பழனி சண்முகநதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பழனியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் உள்ளிட்ட 3பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, பழனியில் 3வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.