குற்றவாளிகளை காட்டிக்கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு - தமிழக மக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு

nia rs5lakhreward
By Petchi Avudaiappan Dec 20, 2021 05:03 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தஞ்சாவூரில் ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகரான ராமலிங்கம் என்பவர் அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். இவர் திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடந்த மதமாற்றம் தொடர்பான நிகழ்வுகளை தட்டிக்கேட்டு வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் திருப்புவனத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா, கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த அப்துல் மஜீத், வடக்கு மாங்குடியை சேர்ந்த புர்ஹானுத்தீன், திருவிடைமருதூரை சேர்ந்த ஷாகுல் ஹமீத் , திருமங்கலக்குடியை சேர்ந்த நஃபீல் ஹாசன்  ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இவர்கள் 5 பேரும் தலைமறைவான நிலையில் அவர்களின் புகைப்படங்களை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, உக்கடம் உள்ளிட்ட இடங்களில் இதுகுறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

 அதில் மேற்கண்ட நபர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு தேசிய புலனாய்வு முகமையின் சென்னை அலுவலகத்தின் முகவரி, செல்போன் எண், தொலைப்பேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.