சென்னை உள்ளிட்ட 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை
Tamil nadu
Chennai
By Thahir
சென்னை,மயிலாடுதுறை,காரைக்கால் உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
NIA அதிகாரிகள் சோதனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலுார்,நீடூர்,எலந்தங்குடி,உத்தங்குடி,கிளியனுார்,ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்புகார வீதியுள்ள வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியது தொடர்பான வழக்கில் சென்னையில் சாதிக் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.