திராவிட மாடல் ஆட்சியின் கடைசி சகாப்தம் இது தான் - எச் ராஜா

M K Stalin DMK BJP H Raja P. K. Sekar Babu
By Karthick Aug 09, 2023 04:20 AM GMT
Report

கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் செய்பவராக இருக்கிறார் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு என பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

எச்.ராஜா ஆவேசம்   

திருச்சி மாவட்ட அரசின் செயல்பாடுகளை கண்டித்து முன்னனி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு தலைமை தாங்கி, ஆளும் அரசிற்கு எதிராக தனது கண்டனங்களை தெரிவித்தார்.

next-ed-is-in-sekarbabbu-house-says-hraja

அப்போது பேசிய அவர், முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் புல்டோசர் ஆட்சி அமையும் என தெரிவித்து இவர்களை விரைவில் நாம் விரட்டு அடிக்க வேண்டும் என பேசினார்.

அடுத்த ரைட் சேகர் பாபு வீட்டில் தான்  

திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழக மக்களுக்கும், ஹிந்துக்களுக்கு விரோதமான ஆட்சியை அமைந்துள்ளது என தெரிவித்த எச்.ராஜா, திராவிட மாடல் ஆட்சியின் கடைசி சகாப்தம் இது தான் தெரிவித்தார்.

next-ed-is-in-sekarbabbu-house-says-hraja

மேலும், தமிழ்நாட்டிற்கு இந்துசமய அறநிலைத்துறை வேண்டாம் என்றும், அமைச்சர் சேகர்பாபு ஒரு கட்டபஞ்சாயத்து, ஆள்கடத்தல் செய்பவர், அவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும் என எச் ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் அடுத்த அமலாக்கதுறை சோதனை சேகர் பாபு வீட்டில் தான் நடக்கும் என எச்சரிக்கை விடுத்த அவர், இந்து அறநிலைதுறைக்கு நிச்சயமாக இந்து வெறியர்கள் தான் அமைச்சராக இருக்க வேண்டும் என முழக்கமிட்டார்.