நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா

New Zealand
By Irumporai May 14, 2022 04:12 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் கொரோனாவுக்கான அறிகுறி தென்பட்டுள்ளது. இந்நிலையில், RAT பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஜெசிந்தா ஆர்டனின் வருங்கால கணவருக்கும் கிளார்க் கேஃபோர்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனால், மே 8ஆம் தேதி முதல் ஜெசிந்தா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது மேற்கொண்ட RAT டெஸ்ட் பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானதால் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கலந்துகொள்ளமுடியாது.

அவருக்கு பதிலாக துணை பிரதமர் கிராண்ட்ராபர்ட்சன் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.