கல்யாணமாகி 1 மாசம் தான்..கணவனுக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு - புதுமணப்பெண் விபரீத முடிவு!

Kerala Death
By Sumathi Aug 29, 2023 06:28 AM GMT
Report

புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகம்

கேரளா, திருவனந்தபுரம் முள்ளில்லாவன் முடு என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரேஷ்மா (23). இவருக்கு அருவிக்கரா பகுதியை சேர்ந்த அக்‌ஷய் ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

கல்யாணமாகி 1 மாசம் தான்..கணவனுக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு - புதுமணப்பெண் விபரீத முடிவு! | Newlywed Woman Suicide For Husband Affair Kerala

தொடர்ந்து, ராஜுடன் அருவிக்கராவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அதிகாலை ரேஷ்மா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

அவரது படுக்கை அறையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியான குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர். விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கல்யாணமாகி 1 மாசம் தான்..கணவனுக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு - புதுமணப்பெண் விபரீத முடிவு! | Newlywed Woman Suicide For Husband Affair Kerala

அதில், ரேஷ்மாவின் கணவர் அக்சய் ராஜ் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததால், கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தில்,

புதுமணப்பெண் ரேஷ்மா தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.