திருமணமாகி 72 நாட்களில் புதுப்பெண் 8 மாத கர்ப்பம்; பதறிய கணவன் - இறுதியில்..
திருமணமான புதுப்பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது புயலை கிளப்பியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கடலூர், வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் புதுப்பெண் வயிற்று வலியால் துடித்துள்ளார். குடும்பத்தார் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பரிசோதித்த போது புதுப்பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. உடனே பெண்ணின் பெற்றோர் வீட்டிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பெண் கர்ப்பம்
பின் கர்ப்பத்துக்கு காரணமானவர் அம்மாவின் உடன்பிறந்த தம்பி லிங்கமுத்து(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து புதுப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் லிங்கமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில், லிங்கமுத்துவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் என்பதால் தன்னுடைய அக்காவின் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்.
அப்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது லிங்கமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெய்வேலி பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோமாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.