திருமணமாகி 10 நாள்; வேறொரு நபருடன் புதுப்பெண் செய்த காரியம் - அதிர்ச்சி!

Karnataka India Death
By Jiyath Apr 14, 2024 11:24 AM GMT
Report

திருமணமான 10 நாளில் தனது காதலனுடன் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் விவகாரம் 

கர்நாடக மாநிலம் கதக் தாலுகா நரேகல் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அப்பண்ணா (28). அதே பகுதியை சேர்ந்தவர் லலிதா (25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கல்லூரி படிக்குபோதே காதலித்து வந்த இவர்கள் இருவரும், தங்களது காதலை வீட்டில் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

திருமணமாகி 10 நாள்; வேறொரு நபருடன் புதுப்பெண் செய்த காரியம் - அதிர்ச்சி! | Newlywed Hangs Herself With Boyfriend

இதற்கிடையே லலிதாவுக்கு வேறொரு நபரை பார்த்து கடந்த 4-ம் தேதி அவரது பெற்றோர்  திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்துக்கு பிறகும் பேசி வந்த லலிதாவும், அப்பண்ணாவும் தங்களால் ஒன்று சேர முடியவில்லையே என்ற வருத்தத்திலும் இருந்துள்ளனர்.

தினசரி ரயில் டிக்கெட் எடுக்கும் கிராம மக்கள்; ஆனால் பயணிப்பதே இல்லை - என்ன காரணம்?

தினசரி ரயில் டிக்கெட் எடுக்கும் கிராம மக்கள்; ஆனால் பயணிப்பதே இல்லை - என்ன காரணம்?

தூக்கிட்டு தற்கொலை 

இதனால் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கிராமத்தின் வெளிப்பகுதிக்கு சென்று அங்கிருந்த ஒரு மரத்தில் ஒரே கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

திருமணமாகி 10 நாள்; வேறொரு நபருடன் புதுப்பெண் செய்த காரியம் - அதிர்ச்சி! | Newlywed Hangs Herself With Boyfriend

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் காதலித்து வந்ததும், காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்ததும் தெரியவந்தது.