திருமணமாகி 36 நாட்கள்தான் - கணவருக்கு விஷம் வைத்து மனைவி வெறிச்செயல்
கணவனை பிடிக்காமல், மனைவி சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளார்.
தொடரும் துயரம்
ஜார்கண்ட், கர்வா மாவட்டத்தில் பஹோகுந்தர் என்ற கிராமம் உள்ளது. அங்கு புத்தநாத் சிங் என்பவருக்கு சுனிதா(22) என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
கடந்த 36 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. ஆனால் புத்தநாத்தை சுனிதாவுக்கு பிடிக்கவில்லை. இதனை தனது குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளார்.
மனைவி வெறிச்செயல்
இருப்பினும் அவர்கள் சுனிதாவை பேசி சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுனிதா, கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்துள்ளார்.
பூச்சிமருந்து கலந்த உணவை, தந்து சாப்பிட வைத்துள்ளார். அதனை சாப்பிட்ட புத்தாசிங் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுனிதாவை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.