முதல் டி20 கிரிக்கெட் போட்டி- : இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி...!
நேற்று நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி -
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
சமீபத்தில் இந்தூரில் நடைபெற்ற கடைசி 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்தை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், நேற்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், இஷான் கிஷன் முதலில் களமிறங்கினர். இஷான் கிஷன் 4 ரன்னில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
இப்போட்டியின் இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
That's that from Ranchi.
— BCCI (@BCCI) January 27, 2023
New Zealand win the first T20I by 21 runs in Ranchi.#TeamIndia will look to bounce back in the second #INDvNZ T20I.@mastercardindia pic.twitter.com/Lg8zmzwYVH