முதல் டி20 போட்டி : இதனால்தான் தோற்றோம்...? - இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி..!

Hardik Pandya Indian Cricket Team New Zealand Cricket Team
By Nandhini Jan 28, 2023 06:40 AM GMT
Report

முதல் டி20 கிரிக்கெட் போட்டி தோற்றதற்கான காரணம் குறித்து இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி -

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

சமீபத்தில் இந்தூரில் நடைபெற்ற கடைசி 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்தை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், நேற்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.

இப்போட்டியின் இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

new-zealand-india-t20i-hardik-pandya

தோல்விக்கான காரணம் - ஹர்திக் பாண்டியா

இந்நிலையில், முதல் டி20 போட்டியின் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த போட்டி இப்படி இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இரு அணிகளும் மிகவும் ஆச்சரியமடைந்தது. ஆனால், நியூசிலாந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நானும், சூர்யகுமாரும் பேட்டிங் செய்யும்போது இலக்கை அடைந்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், பந்துவீச்சின்போது நாங்கள் கூடுதலாக 25 ரன்களை கொடுத்துவிட்டோம்.

வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்கை பார்க்கும்போது இது இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியாக இல்லாமல் வாஷிங்டன் சுந்தார் - நியூசிலாந்து இடையேயான போட்டியாக இருந்தது.

வாஷிங்டனும், அக்சரும் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்களோ அவ்வாறே தொடர்ந்து செயல்பட்டால் அது இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.