முதல் நாளே இப்படியா.! அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் அனைவர்க்கும் அரசின் சார்பில் பண்டிகை காலங்களில் ஊதிய உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதற்கிடையில் இன்று அரசு ஊழியர்களுக்கான நல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர்
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 34% ல் இருந்து 38% ஆக உயர்த்தி அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அரசு பணியளர்களுக்காக 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 16 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் பலன்பெறுவர்கள் என்றும், அரசுக்கு ஆண்டுக்கு 2,350 கோடி ரூபாய் செலவினம் என்றாலும், அவர்களின் நலன்கருதி அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.