நாடாளுமன்ற புதிய சீருடையில் தாமரை....வெடித்த புதிய சர்ச்சை..!!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட புதிய சீருடையில் தாமரை சின்னம் இடம்பெற்றுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
புதிய சீருடை
இந்திய நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கி வருகிறது இந்திய அரசு. கடந்த 2000-ஆம் ஆண்டு கடைசியாக இந்த சீருடை மாற்றப்பட்ட நிலையில், தற்போது 22 ஆண்டுகள் கழித்து புதிய சீருடை பணியாளர்களுக்கு வழங்கவுள்ள நிலையில், அதன் மாதிரி வடிவம் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை புதியதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தை முன்னிட்டே நாடாளுமன்ற பணியாளர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தாமரை ஏன்.?
அந்த சீருடையில், தாமரை சின்னம் டிசைன் பொறிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை இது கிளப்பியுள்ளது. 271 பணியாளர்களுக்கு இந்த புதிய சீருடை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
தாமரை இந்தியாவின் தேசிய சின்னமாகினும், அது பாஜகவின் சின்னம் கூட என்பதால் எதிர்க்கட்சிகள் இதனை எதிர்க்கின்றன. அதே வேளையில், தேசிய சின்னமான விலங்கோ அல்லது வேறேதும் சின்னமோ இடம்பெறாதது எதிர்ப்பை பெற்றுள்ளது. மேலும், காவலர்களுக்கு சவாரிக்கு பதிலாக, குர்தா மற்றும் பைஜாமாவுடன் சேர்த்து மணிப்பூரி டர்பன் வழங்கப்படவுள்ளது.