பிரதமர் மோடியின் தொகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் : எத்தனை கோடி தெரியுமா?
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் ரூ 300 கோடியில் கிரிக்கெட் மைதானம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரணாசி தொகுதி :
உத்திர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இந்த மைதானம் ரூ 300 கோடி செலவில் அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
பி .சி .சி .ஐ - ஆய்வு :
கிரிக்கெட் மைதானம் அமைக்க வாரணாசி தொகுதியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில் இடம்தேர்வு செய்யப்பட்டுள்ளது , அந்த இடத்திற்கு பி,சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா ,துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது .
3-வது சர்வதேச மைதானம் :
உத்திர பிரதேச கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானம் ,லக்னோவில் உள்ள ஏகானா மைதானம் ஆகியவற்றைத் தொடர்ந்து 3- வதாக வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்ட உள்ளது . இந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது