இயற்கைக்கு மாறான உறவு; மத்திய அரசு அதிரடி மாற்றம் - முக்கிய தகவல்!
புதிய சட்டம் குறித்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இந்திய தண்டனை சட்டம் எனப்படும் ஐபிசிக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற பெயரில் உள்ள சட்டமசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். தூக்கு தண்டனை தொடரும் என்றும்
மசோதா
அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ளத் போல் தண்டனைகளுக்கு அபராதத்தோடு சேவை செய்வதையும் தண்டனையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ’பெட்டி கேஸ்’ எனப்படும் சிறிய குற்றங்களுக்கு சிறிய அளவிலான தண்டனைகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அபராதத்துடன் குறிப்பிட்ட சில துறைகளில் சம்பளம் இன்றி வேலை செய்யும் வகையில் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் வகையிலும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் அதிக பட்சமாக மரண தண்டனை வழங்க வழிவகை செய்யும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஓரினச்சேர்க்கை, மனித-மிருக உறவு உள்ளிட்டவை சட்டத்தின் கீழ் இயற்கைக்கு மாறான உறவாக கருதப்படகிறது. அதன்படி பார்த்தால் ஆண்-ஆண், பெண்-பெண் உறவான ஹோமோசெக்சுவல் (homosexual) முறையை தவறானது என இந்த சட்டப்பிரிவு வரையறை செய்கிறது.