நாகசைதன்யாவை நினைத்து சமந்தா செய்த செயல் - கடைசியில் நிகழ்ந்த விபரீதம்
நடிகை சமந்தா டாட்டூ குத்திக்கொள்ளாதீர்கள் என தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ள நிலையில் ஏன் அப்படி சொன்னார் என்ற குழப்பம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டதட்ட 3 வருடங்கள் மண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாக சைதன்யாவை பிரிவதாக அவர் அறிவித்தார்.விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிப்பில் அடுத்ததாக விஜய் சேதுபதியுடனான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகவுள்ளது.
இவர்களது பிரிவுக்கு பல காரணம் சர்ச்சையாக சொல்லப்பட்டு வரும் நிலையில் சமந்தா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், டாட்டூ குத்திக் கொள்வது பற்றி கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா தயவு செய்து டாட்டூ மட்டும் குத்திக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இத்தனைக்கும் சமந்தா ஒரு டாட்டூ பிரியர். அவர் தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யா நினைவாக தன்னுடைய உடலில் 3 இடங்களில் டாட்டூ குத்தி உள்ளார். நடிகை சமந்தா முதுகில் 'Ye Maaya Chesave' என்ற படத்தின் நினைவாக 'ymc' என்ற டாட்டூம், மணிக்கட்டில் இரட்டை அம்புகள் மாதிரி உள்ள ஒரு சின்னத்தை சமந்தா மற்றும் நாகசைதன்யாவும் ஒரே மாதிரி பச்சை குத்தி இருக்கின்றனர்.
மேலும் நாகசைதன்யாவின் செல்லப்பெயரான சாய் டாட்டூ ஒன்றையும் தன்னுடைய முதுகு பகுதியில் குத்தியுள்ளார். தற்போது நாகசைதன்யாவை சமந்தா பிரிந்து விட்டதால், அந்த டாட்டூவை பார்க்கும் போது எல்லாம் நிச்சயம் வருத்தமடைந்து இருப்பார் என்பதால் இப்படி ஒரு அட்வைஸை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
