‘’ என்ன தல செளக்கியமா ‘’ : தோனி கம்பீர் வைரலாகும்புகைப்படம்
எம்எஸ் தோனியுடன் கவுதம் கம்பீர் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது.
இந்த நிலையில் போட்டி முடிந்தபின் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனியும், கவுதம் கம்பீரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கவுதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘மீண்டும் கேப்டனை சந்தித்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.
இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோனிக்கும் கம்பீருக்கும், இடையே மோதல் இருப்பதாக கூறப்படும் நிலையில் இவர்களின் புகைப்படம் வைரலாகிவருகிறது இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.