என் பொண்ணா இருந்தா செருப்பாலயே அடிப்பேன் : சர்ச்சையில் சிக்கிய ஜிபி முத்து
பிக்பாஸ் போட்டியாளரான ஜிபி முத்து, ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசியது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.
ஜிபி முத்து
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் என்றால் அது ஜிபி முத்து தான். நாளுக்கு நாள் இவருக்கான சப்போர்ட் பெருகி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற சம்பவத்துக்கு பின் நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்
#Asal and #Dhanalakshmi #BiggBossTamil6 pic.twitter.com/znXRO7D19z
— Dr.Ilavarasi (@Ilavarisirk) October 19, 2022
நேற்று நள்ளிரவு அசல் கோளார் மற்றும் தனலட்சுமி இடையே சண்டை நடைபெற்றது, இதில் விக்ரமன் கோபமடைந்து அசீம் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இடையே வந்த ஜிபி முத்து, நீங்க அதைப்பற்றி பேசக்கூடாது என சொல்லி விக்ரமனை சமாதானப்படுத்த முயன்றார்.
விமர்சனத்தை சந்திக்கும் ஜிபி முத்து
தன்னை பேச விடாமல் தடுத்த ஜிபி முத்துவிடம் கடிந்துகொண்ட விக்ரமன், நீங்க என் ஊர்காரர் என்பதால் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். என்ன நீங்க தடுக்காதீங்க. நான் பேசுவதற்கு கூட இந்த வீட்டில் உரிமை இல்லையா என கேட்டார்.
இதன்பின் பேசிய ஜிபி முத்து, பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்பதால் உங்களை தடுத்தேன் எனக்கூறி, தனலட்சுமி அசலிடம் எகிறியது தவறு என பேசினார்.
ஆணாதிக்க பேச்சு
ஒரு பொம்பள புள்ள எகிறினால் ஆணுக்கு கோபம் வரத்தான் செய்யும் என்றும், பொண்ணுங்க ஆண்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜிபி முத்து பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
அந்த சமயத்தில் கடந்த வாரம் தனலட்சுமிக்கும், தனக்கும் இடையே நடந்த சண்டையை பற்றியும் பேசிய ஜிபி முத்து, தான் மன்னிப்பு கேட்டும் தனலட்சுமி தன்னை மன்னிக்கவில்லை என்று கூறினார்.
எனது மகளாக இருந்திருந்தால் செருப்பாலயே அடிச்சிருப்பேன் என சொன்ன ஜிபி முத்துவிடம் இதெல்லாம் தப்பு, உங்க பொண்ணா இருந்தாலும் செருப்பால அடிக்கக்கூடாது என கூற, இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இல்லாத ஜிபி முத்துவின் இந்த பேச்சு இணையத்தில் கடும் எதிர்ப்பினை சந்தித்துள்ளது.