4 இந்தியர்கள் உள்பட 22 நபர்களுடன் சென்ற நேபாள விமானம் மாயம் - தேடும் பணிகள் தீவிரம்!

Nepal
By Swetha Subash May 29, 2022 07:15 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

நேபாளத்தில் 22 நபர்களுடன் புறப்பட்டுச் சென்ற தாரா ஏர் 9 என்ஏஇடி விமானத்தின் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளது.

நேபாளத்தில் இன்று காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சமுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமாகியுள்ளது.

4 இந்தியர்கள் உள்பட 22 நபர்களுடன் சென்ற நேபாள விமானம் மாயம் - தேடும் பணிகள் தீவிரம்! | Nepal Tara Flight With 22 Lost Contact With Radar

மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர்.

பொக்காராவில் இருந்து புறப்பட்டு சென்ற 25 நிமிடத்தில் ஜோம்சமில் தரையிறங்கியிருக்க வேண்டிய விமானம் சுமார் 2 மணி நேரமாக தொடர்பில் இல்லாமல் மாயமாகி உள்ளதால் விமானத்தை தேடும் பணியில் ஹெலிகாப்டர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தை தொடர்புக்கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.