‘அந்த மனசு இருக்கே... நேபால் வீரர் செய்த செயல்...’ - வாழ்த்துக்களை குவித்து தள்ளும் ரசிகர்கள்
நேபால் கிரிக்கெட் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஒருவர் செய்த செயல் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. இவரது செயலால் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அப்படி என்ன அவர் செய்தார்ன்னு தெரியுமா?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக பயிற்சி பெறும் வகையில் நேபால் மற்றும் அயர்லாந்து அணிகள் டி20 போட்டிகளில் மோதி வருகின்றன.
இந்நிலையில், பயிற்சி ஆட்டத்தில், நேபால் பவுலர் கமல் சிங் ஓடி வந்து பந்தை பேட்ஸ்மேனை நோக்கி வீசினார். அப்போது பேட்ஸ்மேன் மார்க் அடைய்ர் மிட் பந்தை தூக்கி அடிக்க முற்சி செய்தார். ஆனால், பந்தோ அருகிலேயே விழுந்துவிட்டது. அப்போது, ஸ்ட்ரைக்கரில் இருந்த ஆண்டி மெக்ப்ரேன் சிங்கிள் எடுக்க ஓடினார்.
அதே நேரத்தில், அருகிலேயே விழுந்திருந்த பந்தை எடுத்து ரன் அவுட்டாக்க பவுலர் கமல் முற்பட்டார். பந்தை எடுத்து விக்கர் கீப்பர் ஆசிஃப் ஷேய்க்கிடம் வீசினார். அப்போது, எதிர்பாராமல் அவர் மீது பேட்ஸ்மேன் மோதி கீழே விழுந்தார். ஆனால், விக்கெட் கீப்பர் கைக்கு பந்து வந்து விட்டது.
This is brilliant from Nepal wicket-keeper Aasif Sheikh - spirit of cricket moment. pic.twitter.com/704Q85B3gN
— Johns. (@CricCrazyJohns) February 14, 2022
அவர் நினைத்திருந்தால் பேட்ஸ்மேனை சுலபமாக அவுட்டாக்கி இருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. மாறாக, ஸ்டம்ப் வரை சென்ற அவர், கடைசியில் வேண்டுமென்றே பேட்ஸ்மேனை அவுட்டாக்கவில்லை. பேட்ஸ்மேன் கீழே விழுந்ததை பார்த்து விக்கெட் எடுக்க முயற்சிப்பது நியாயம் கிடையது என்று அவர் நினைத்து அவுட்டாக்கவில்லை.
அவர் செய்த செயல் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. அந்தப் போட்டியில், நேபால் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இருந்தாலும், ஆசிஃப் செய்த செயல், அனைவரின் கவனமும், பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலர் ஆசிஃப்பிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறார்கள்.