எரிந்த மனித தலையுடன் சாமி ஆட்டம் - போலீஸார் அதிரடி
Tamil nadu
Crime
By Sumathi
மனித தலையுடன் சாமியாடிய பூசாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொடை விழா
நெல்லை, வெள்ளங்குளி உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. அன்று இரவு 12 மணிக்கு நடைபெற்ற சாமக்கோடையில் வேட்டைக்குச் சென்ற சாமியாரிகள்,
சுடுகாட்டிற்கு சென்று விட்டு கோவிலுக்கு திரும்பிய போது மனித தலை மற்றும் கை கால்களுடன் வந்து ஆடியது சர்ச்சையாக வெடித்துள்ளது.
வெடித்த சர்ச்சை
இந்நிலையில் வெள்ளங்குளி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் மனித தலையுடன் சாமியாடிய பூசாரிகள் 5 பேர் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.