நெல்லையில் கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை
Preacher got deah sentence in nellai: தமிழக மாவட்டம் திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில், கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் இலந்தை குளம் பகுதியில் மத போதகர் ஆபிரகாமிற்கு போக்ஸோ வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
போக்ஸோ வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகேயுள்ள இலந்தை குளம் பகுதியில், நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 50 வயதான கிருத்துவ மத போதகர் ஆபிரகாம் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போக்சோ வழக்குப் பதியப்பட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கில் தீர்ப்பை வாசித்தார். சிறுமிகளை வன்கொடுமை செய்த ஆபிரகாமிற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil